May 18, 2011

(திருக்குறள்) Thirukkural about Biodiversity

மார்ச் மாத "பூ உலகு" இதழை வாசித்தபோது, திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள், தன்னுடைய கட்டுரையில் ஒரு திருக்குறளை குறிப்பிட்டிருந்தார்.


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 


 
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் இயற்கை சமநிலைக்கு அவசியமானது என்பதை இந்த குறள் வலியுறுத்துகிறது. வள்ளுவர் குறிப்பிட்டிருப்பது பல்லுயிரியம். இந்த உலகம் படைக்கப்பட்டது மனிதர்களுக்கு மட்டுமல்ல. எல்லா உயிர்களுக்கும் இங்கு பங்கு உண்டு.


ஒவ்வொரு உயிரியும் ஒன்றையொன்று சார்ந்தே வாழ்கிறது. எப்படி பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதை இயற்கை எல்லா உயிரினங்களுக்கும் சொல்லி வைத்திருக்கிறது. அதை எல்லா உயிரினங்களும் இயல்பாகவே பின்பற்றுகின்றன. ஒரு புலி தன் உணவின் தேவைகேற்ப தன் எல்லையை நிர்ணயிக்கிறது. தன் எல்லையை விரிவு படுத்தி ஒட்டு மொத்த வனத்தையும் தன் கைக்குள் வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. எல்லா உயிர்களும் தனித்தோ, குழுவாகவோ எல்லைகளை தன் உணவு சார்ந்து நிர்ணயிக்கிறது.


மனிதன் தன் எல்லைகளை வளர்த்துக் கொண்டே போகிறான்.வனத்தையும் வன வாழ் உயிர்களையும் துன்புறுத்துகிறான். இதையெல்லாம் வள்ளுவனால் எப்படி முன்கூட்டியே உணர்ந்து உபதேசிக்க முடிந்தது என்பது புரியவில்லை. வள்ளுவன் விஞ்ஞானியோ என்று கூட தோன்றுகிறது.




No comments:

Post a Comment

Follow