ஏறுபுலி : வேங்கைகளில் வலிமையானது

ஆண் சிங்கத்திற்கும்  பெண் புலிக்கும் பிறந்த இந்த லைகர் தான், உலகின் மிகப்பெரிய பேந்தரா பேரினத்தின் உயிரினமாக கருதப்படுகிறது. இயற்கையில் சிங்கமும் புலியும் ஒரே மாதிரியான வனச் சூழ்நிலையில் வாழ்வது கிடையாது.



சிங்கம் வாழ்வதற்கு ஓரளவு சமவெளிப் பகுதியும், புலிகள் வாழ்வதற்கு அடர்ந்த காடுகளும் தேவைப்படுகிறது. ரஷ்யாவில் தொடங்கி இந்தியா வரை நீண்டு இருந்த புலிகளும், தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியா வரை நீண்டு இருந்த சிங்கங்களும், ஒரு வேளை இந்தியாவில் சந்தித்திருக்கலாம். இந்தியாவின் மிகப்பெரிய நிலப்பரப்பு அவற்றை தனித்து இயங்கச் செய்திருக்கிறது.


தற்சமயம் இந்த லைகர் உருவானது, மனிதர்களின் பராமரிப்பில் இருக்கும் சிங்கத்திற்கும் புலிக்கும் பிறந்தது. சுமார் 410 கிலோ எடையும், 12 அடி நீளமும் கொண்ட இந்த லைகர், சிங்கம் - புலி இரண்டை விடவும், மிகப்பெரிய விலங்காக உள்ளது. அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில், மியாமியில் இந்த லைகர் பராமரிக்கப்பட்டு வருகிறது.



சுமார் கி.பி. 1700 முதல் லைகர் உலகில் இருந்து வருவதற்கான ஆதாரங்கள் உள்ளன. பார்ப்பதற்கு புலி போன்றும் இல்லாமல், சிங்கம் போன்றும் இல்லாமல் காணப்படும் இவற்றின் உடலில், செந்நிற அருங்கோன வடிவங்கள் (சிறுத்தை புலியின் உடலில் இருப்பது போன்ற) காணப்படுகின்றன.


Lion மற்றும் Tiger என்ற வார்த்தைகளின் முன்-பின் எழுத்துக்களை கொண்டு Liger உருவானது. எனவே தமிழில் இதற்கு சரியான பெயர் இருப்பதாக தெரியவில்லை. ஆண் சிங்கம் "ஏறு" என்று சங்க தமிழில் கூறப்படுகிறது. எனவே இந்த லைகரை "ஏறுபுலி" என்று அழைக்கலாம்.

இதே போன்று, ஆண் புலிக்கும் பெண் சிங்கத்திற்கும் பிறக்கும் விலங்கு டைகான் என்று அழைக்கப்படுகிறது.


Post a Comment

0 Comments