Feb 4, 2011

விழிப்புணர்வு பிரச்சாரம்

கொல்லேகால் மற்றும் சத்யமங்கலம் இடையிலான பிலிகிரிரங்கன் பெட்டா காடுகளுக்கு தனித் தனி குழுக்களாக சென்று திரும்பினோம். மொத்தம் ஏழு குழுக்களாக சென்று சுமார் 250 மலை கிராமங்களை சேர்ந்த மக்களிடமும் மற்றும் பள்ளி மாணவர்களிடமும் காட்டுத்தீ பரவாமல் இருக்க எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசி வந்தோம்.

மூன்று நாட்களில் ஒவ்வொரு குழுவும் முறையே 900 கி.மீ பயணம் செய்து மொத்தமாக 20000 பள்ளி மாணவர்களை சந்தித்து அவர்களிடம் பிரசுரங்களை விநியோகம் செய்தோம். பல்வேறு மலை கிராமங்களிலும் குழந்தைகளை சந்தித்து பேசி வந்தது மிகுந்த உற்சாகம் அளிக்கிறது.


No comments:

Post a Comment