இன்னும் ஆட்டம் பாக்கியிருக்கிறது

மிகவும் அற்புதமான தருணங்களை நம் நினைவில் இருந்து அழித்தல் என்பது இயலாத காரியம். உலகின் அதிகமான இளைஞர்களை கொண்ட ஒரு தேசம் இந்தனை ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்ததர்க்கு கிடைத்த இந்த பலன், இனி எத்தனை ஆண்டுகளானாலும் யாவர் மனதிலும் நிலைத்து நிற்கும்.

 
இனம், மொழி,மதம் யாவும் கடந்து 121 கோடி மக்களை ஒரே புள்ளியில் நிறுத்தி இந்த உலகம் அதிர குரல்கொடுக்க இந்தியா என்ற ஒரு தேசத்தாலும் , இந்தியன் என்ற ஒருவனாலும் மட்டுமே முடியும். ஒரு விளையாட்டு என்னையும், இதை இந்த உலகின் ஏதோ ஒரு தேசத்தில் இருந்து படித்துக்கொண்டிருக்கும் யாரோ ஒரு இந்தியனையும் கர்வப்பட செய்யும் எனில், இதுவே தலைசிறந்த விளையாட்டாக இருக்ககூடும். சமீப கால இந்திய வெற்றிகள் ஒவ்வொரு விளையாட்டிலும் மேன்படத் தான் செய்கிறது.


 இந்தியன் என்பதற்காக பெருமை கொள்வோம். இந்த தருணத்தில் வெளிப்படட்ட தேசத்தின் மகிழ்ச்சியும், ஒற்றுமையும், தேசத்தின் மீதான பற்றும் தொடர்ந்து எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்கும் எனில், இந்தியன் என்ற கர்வத்தோடு உலகின் எல்லா தெருக்களிலும் சுற்றித் திரியலாம். நிலைத்து நின்று ஆடலாம், இன்னும் ஆட்டம் பாக்கியிருக்கிறது.


Post a Comment

0 Comments